2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…

சென்னை தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கௌரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் செண்டிரிங் வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி 2019 ஆண்டில் இருந்து பழகியுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சிறுமிக்கு தெரியாமல் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை கார்த்திக் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோவை தனது நண்பரும், பனங்காட்டு படைகட்சி கெளரிவாக்கம் மாவட்ட செயலாளருமான மணிகண்டன் என்பவரிடம் காட்டியுள்ளார்.

பின்னர் இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டி மணிகண்டன் மற்றும் கார்த்திக் இருவரும் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் தங்களது கூட்டாளியான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தி.மு.க தாம்பரம் சட்டமன்ற தொகுதி சமூகவலைதள பொறுப்பாளர் தனசேகரையும் தங்களுடன் 3 பேரும் சேர்ந்து தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை மிரட்டி கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னரும் தொடர்ந்து சிறுமியை மிரட்டி அவர்கள் பாலியல்வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து 3 பேரும் அந்த சிறுமியை ஒரே நேரத்தில் பாலியல் ரீதியில் துன்புறத்தியதால் சிறுமி அதை தாங்கி கொள்ள முடியாமல் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து, அவரது தாய், சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியோடு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள தனசேகர் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You'r reading 2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்