டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Digital Shiksha & Rojgar Vikas Sansthan India.லிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 433

கல்வி தகுதி:

10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: பயிற்றுநர் உதவித்தொகை சட்டத்தின் படி (11500-19200) வழங்கப்படும்.

வயது:
விண்ணப்பதாரர்கள் 20-02-2021 ன் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு ஜிஎஸ்டி உட்பட ரூ.500 வசூலிக்கப்படும். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் 11.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/1-(2).pdf

You'r reading டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலிவுட்டுக்கு குறி வைத்து மும்பையில் நடிகை வாங்கிய வீடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்