கோவில் யானை ராஜேஸ்வரி கருணைக் கொலை: உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் உள்ள சுகவனேஷ்வரர் கோவிலில் நோய்வாய்பட்டு கிடக்கும் யானை ராஜேஸ்வரி யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக யானை ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் எழுந்து நடக்கக்கூட முடியாமல் நோய்வாய்பட்டது. படுத்த படுக்கையாக ஆன ராஜேஸ்வரிக்கு சிகிச்சைகள் அளித்தும் குணப்படுத்த முடியவில்லை. இதனால், யானையை கருணைக் கொலை செய்வதற்காக அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, யானையை கருணைக் கொலை செய்ய முடியுமா என்பது குறித்து பதிலளிக்கும்படி இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை (இன்று) நடைபெறும் என தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது, யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய நீதிபகைள் அனுமதி அளித்தனர். யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சேலம் கால்நடை மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், யானையைக் கருணை கொலை செய்வதற்கு முன்பு மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds