அள்ள அள்ள குறையாத அட்சய திருதியன்று கூறவேண்டிய மந்திரம்

Apr 18, 2018, 19:03 PM IST

தமிழ் மாதமான சித்திரை மாதம் தொடங்கி வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்து மூன்றாம் நாளில் ஆண்டுதோறும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாள் அன்று தங்கம் வாங்கினால் செல்வம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய தினத்தில் தங்கம் வாங்க முடியவில்லை என்றாம், வெள்ளி அல்லது வெண் நிறத்தில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை வாங்கி வழிப்படலாம். தங்கம் வாங்க முடியாதவர்கள், ஒரு கைப்பிடி உப்பை வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் எப்போதும் நிறைந்திருக்கும். அட்சய திருதியை நாளில் தானம் செய்வது நமக்கு அமோக பலனை தரும்.
அட்சய திருதியை அன்று, இறைவனை வழிப்படும்போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரம் கூறுவது மூலம் நமது கடன் சுமைகள் நீங்கி வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை

சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!

ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹந்த

மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அள்ள அள்ள குறையாத அட்சய திருதியன்று கூறவேண்டிய மந்திரம் Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை