உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் அபார சதம் கைகொடுக்க இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்பது இன்று தெரிந்துவிடும். Read More
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், எளிதான கேட்சை கோட்டை விட்ட ஆப்கன் கேப்டன் குல்பதின் நபி, அதற்குக் காரணம் சூரியன் தான் என்று சைகை காட்டிய சுவாரஸ்யம் நடந்தேறியது Read More
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத ஒரே அணி என்ற மோசமான சாதனையுடன் நாடு திரும்புகிறது ஆப்கன் அணி .எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சவால் விட்டாலும் பினிசிங் செய்வதில் கோட்டை விட்டதால் சில வெற்றி வாய்ப்புகள் பறி போன சோகத்துடன் வெளியேறியுள்ளது. கடைசியாக மே.இந்திய தீவுகள் அணியுடன் ஆடிய போட்டியிலும் 312 ரன் என்ற இலக்கை கெத்தாக விரட்டிச் சென்று பினிசிங் செய்ய முடியாமல் 23 ரன்களில் தோல்வியைத் தழுவிய சோகம் நிகழ்ந்தது. Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏதேனும் பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அந்த அதிசயம் என்னவென்றால் வங்கதேசத்துடனான போட்டியில் பாகிஸ்தான் முதலில் ஆடி 350 ரன் குவிக்க வேண்டும். பின்னர் வங்கதேசத்தை 39 ரன்னில் சுருட்ட வேண்டும். இந்த அதிசயம் நிகழுமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது Read More
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததால் விரக்தியடைந்துள்ள அம்பதி ராயுடு,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டு குடியுரிமை பெற்றுள்ள அம்பதி ராயுடு, அந்த நாட்டுக்காக விளையாடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிதிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுமே முட்டி மோதும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம். Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பல் ஆட்டம் தொடர்கிறது . வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும், லோகேஷ் ராகுலும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 314 ரன்கள் எடுத்தது. Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கரும் விலகியுள்ளார். Read More