திருப்பதி: டிசம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 30 ஆம் தேதி முதல் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் கட்டணம் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் வரும் 30 ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது .
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்புத் தரிசன டோக்கன்கள் மற்றும் தங்கும் விடுதி அறைகள் முன்பதிவு ஆகியவற்றை வரும் 30ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்களை
http//tirupathibalaji.ap.gov.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் .
கொரோனா தொற்று அச்சம் காரணமாக முன்பதிவு செய்த பக்தர் கள் மட்டுமே 300 ரூபாய் சிறப்புத் தரிசன வழியாக அனுமதிக்கப்படுவர் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
You'r reading திருப்பதி: டிசம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 30 ஆம் தேதி முதல் வெளியீடு Originally posted on The Subeditor Tamil
More Andhra pradesh News
READ MORE ABOUT :