நீ எதுக்கு பிக் பாஸ் வந்த.. ஷிவானியின் தாயார் ஆவேசம்..!

by Logeswari, Dec 29, 2020, 17:31 PM IST

விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ளன. பிக் பாஸ் வீட்டிற்குள் சில தகுதியற்ற ஹவுஸ் மேட்ஸ் இருப்பதாக மக்களுக்குள் சலசலப்பு இருந்து வருகிறது. ஷிவானி, ஆஜீத், கேபி போன்றவர்கள் இந்த விலையாட்டை முறையாக விளையாட எந்த வித முயற்சியும் எடுக்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இருப்பினும் அவர்கள் காப்பாற்றப்பட்டு தகுதியானவர்களை வெளியே அனுப்புவது குறித்து பல செய்திகள் வெளியாகி வருகிறது. அதுவும் ஷிவானி பற்றி நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் வெச்சி செய்து வருகின்றனர். பாலாவிற்கு சோம்பு தூக்கும் ஷிவானி என்று பெயர் எடுத்துள்ளார். இருவருக்குள் காதல் இருப்பதாக கிசு கிசுக்கள் கிளம்பியது. ஏன் வீட்டிற்குள் இருக்கும் ஆரிக்கும் இந்த சந்தேகம் இருந்தது. ஆனால் இருவரும் அதை மறுத்துவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவு பெரும் காலம் நெருங்கிவிட்டது.

இன்று வெளியான ப்ரோமோவில் ஷிவானியின் தாயார் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார். ஷிவானி தனது தாயை 80 நாள்களுக்கு பிறகு சந்தித்தத்தால் அணைத்து தழுவி கொண்டார். பிறகு அவரது தாய் நீ எதுக்கு பிக் பாஸ் வந்த.. நீ பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?? என்று கோவமாக கேட்டகிறார் இதற்கு ஷிவானி இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் முகத்தை வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் மூன்றில் லாஸ்லியாவிற்கு நடந்தது இப்பொழுது ஷிவானிக்கு நடக்கிறது என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

You'r reading நீ எதுக்கு பிக் பாஸ் வந்த.. ஷிவானியின் தாயார் ஆவேசம்..! Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை