நீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை! 13-11-2020
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரிய தொடங்கியது. தீபாவளி நெருங்குவதால் இந்த வாரம் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தங்கத்தையும் விட்டு வைக்கவில்லை. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. ஆனால் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4761 க்கு விற்பனையானது. ஆனால் சந்தையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.27 உயர்ந்து, கிராமானது ரூ 4788 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 4788
8 கிராம் ( 1 சவரன் ) - 38304
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5141 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ. 27 விலை உயர்ந்து, கிராமானது 5168 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5168
8 கிராம் - 41344
வெள்ளியின் விலை
தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறைய தொடங்கும் ஆனால் பண்டிகை தினங்கள் நெருங்குவதால், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் கிராமிற்கு ரூபாய் 10 பைசா உயர்ந்து, கிராம் 67.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 67200 க்கு விற்பனையாகிறது.
You'r reading நீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை! 13-11-2020 Originally posted on The Subeditor Tamil
More Business News