சென்னையில் பயங்கரம்: நடந்து செல்லும் பெண்களை தாக்கி சங்கிலி பறித்த ஆசாமிகள்

Feb 12, 2018, 13:36 PM IST

சென்னையில் இரண்டு இடங்களில், நேற்று பட்டப்பகலில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை தரதரவென இழுத்து தாக்கிவிட்டு சங்கிலி பறித்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மேனகா (45). நேற்று காலை உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக மேனகா அரும்பாக்கம் வந்துள்ளார். அப்போது, மேனகா திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றபோது, 2 பேர் மோட்டார் சைக்கிலில் வந்தனர். பைக்கில் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபர் மேனகாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றான். செயின் பறித்த வேகத்தில் மேனகா கீழே விழுந்தார். அப்போதும் செயினை விடாத நபர்கள், மேனகாவை தரதரவென்று இழுத்தவாறு 15 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதில் மேனகா பலத்த காயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை, ராகவேந்திரா நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 61). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). நேற்று முன்தினம் இருவரும் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஜெயஸ்ரீ அணிந்து இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலிலயை பறித்துக் கொண்டு ஓடினார். அவரை அசோக்குமார் மற்றும் அங்கு இருந்தவர்கள் விரட்டினர். ஆனால், அந்த மர்மநபர் அங்கு தயாராக இருந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

மர்ம நபர் சங்கிலி பறித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜெயஸ்ரீ காயம் அடைந்தார். இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த இரு சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

You'r reading சென்னையில் பயங்கரம்: நடந்து செல்லும் பெண்களை தாக்கி சங்கிலி பறித்த ஆசாமிகள் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை