ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண் பிரேமா. கடந்த மாதம் 28-ம் தேதி காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால், அவரை தேடி அவரது தாய் தோட்டத்திற்கு சென்றார். அப்போது, தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரேமா போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவரது தாயார், மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி பிரேமா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பிரேமாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடைக்கல் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். அதில் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலா என்பவரை பிரேமா காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

பாலாவின் செல்போனை போலீசார் ஆராய்ந்ததில், பிரேமாவின் தந்தை நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வரும் 48 வயதான கலியமூர்த்தி என்பவரின் செல்போனில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரியவந்தது. பிரேமாவிடம் போன் இல்லாததால், கலியமூர்த்தியின் செல்போனை வாங்கி பாலாவுக்கு போன் செய்துள்ளார் பிரேமா.

கலியமூர்த்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பிரேமா மீது ஆசைபட்ட கலியமூர்த்தி கடந்த 28-ம் தேதி தனியாக வந்த பிரேமாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதில் பிரேமா மறுத்து சத்தம்போடவே அவரை அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
the-person-who-sold-biryani-for-ten-rupees-was-suddenly-arrested
பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றவர் திடீர் கைது
villupuram-goldsmith-murders-wife-and-three-daughters-commits-suicide
தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக எழுப்பி சயனைடு விஷம் கலந்த பாலை கொடுத்த சிவகாமி.. குடும்பமே உயிரிழந்த பரிதாபம்..
admk-defeated-dmk-congress-in-vikkiravandi-nanguneri-bypoll
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி..
total-vote-percentage-vikkiravandi-nanguneri-bypoll
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பதிவான வாக்குகள் எவ்வளவு?
vikkiravandi-nanguneri-by-poll-tommorow
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடக்கம்
mkstalin-campaign-for-dmk-in-vikkiravandi
எடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
dmk-is-planning-to-give-money-to-voters-vikkiravandi-election
விக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
dmk-announced-by-election-commitees-fo-vikkiravandi-nanguneri
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல்.. திமுக பொறுப்பு குழுக்கள் நியமனம்
Tag Clouds