அயனாவரத்தில் பயங்கரம்: பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை

சென்னை: அயனாவரத்தில் இரவு பணியில் இருந்தபோது எஸ்.ஐ சதீஷ் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ் (28). இவர், நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை பணியில் இருந்தபோது சதீஷ் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் மேயூரைச் சேர்ந்த சதீஷ் டி.பி.சத்திரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சதீஷ் இன்று அதிகாலை போலீஸ் ஸ்டேஷனின் வாயிலில் நின்றபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மீண்டும் எஸ்.ஐ சதீஷ் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds