கேரளாவில் மீண்டும் கொடூரம்.. மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

கேரளாவில் ஏற்கனவே கொரோனா பாதித்த 2 இளம்பெண்களை ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று நள்ளிரவு மேலும் ஒரு இளம்பெண்ணை மருத்துவமனையில் வைத்து ஊழியர் பலாத்காரம் செய்ய முயற்சித்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள ஆரன்முளாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் இரவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்ஷாத் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த இரு மாதங்களாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுவை பலமுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே கொரோனாவிலிருந்து மீண்ட ஒரு இளம்பெண்ணுக்கு நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு சுகாதார ஆய்வாளர் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்த மேலும் ஒரு இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் ஊழியரின் பலாத்கார திட்டம் வெற்றி பெறவில்லை. கோழிக்கோடு அருகே உள்ள உள்யேரி என்ற இடத்தில் மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு 33 வயதான இளம்பெண் கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது பெற்றோருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த இளம்பெண்ணின் தந்தை முதல் மாடியிலும், அவரும், அவரது தாயும் மூன்றாவது மாடியில் உள்ள வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கவச உடை அணிந்து வந்த ஒரு மருத்துவமனை ஊழியர் அந்த இளம்பெண்ணிடம் டாக்டர் அழைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் அந்த ஊழியருடன் சென்றுள்ளார். 4வது மாடிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், இளம்பெண்ணை ஆளில்லாத இடத்தில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் அவர் புகார் செய்தார்.

ஆனால் புகார் தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் போலீசுக்கு போன் செய்து புகார் கூறினார். நள்ளிரவாகி விட்டதால் காலையில் வந்து புகார் குறித்து விசாரணை செய்வதாக போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு இரையாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :