காரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..

சிங்கப்பூரில் 15 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு இக்கொடிய சம்பவம் 15 வயது சிறுமிக்கு அரங்கேறியது. சிங்கப்பூரில் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் இதில் கதாநாயகர். அதே பள்ளியில் 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆசிரியரின் மனதில் சிறுமியை பார்க்கும் பொழுது தவரான ஆசை உதயமாகியுள்ளது. இதனால் சிறுமியுடன் இரவு முழுவதும் மற்றும் விடுமுறை நாட்களில் விடிய விடிய போனில் சாட்டிங் செய்துள்ளார். சிறுமியும் ஆசிரியர் என்ற மரியாதையுடன் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஒரு நாள் ஆசிரியர் சாட்டிங் மூலம் உனது முன்னாள் காதலர் பற்றி நேரில் பேசலாம் என்று காபி ஷாப்புக்கு அழைத்துள்ளார். அதே போல் இருவரும் காபி ஷாப்பில் சந்தித்து சிறிது நேரம் சிறுமியின் முன்னாள் காதலரை பற்றி பேசியுள்ளனர். வேறொரு நாள் மீண்டும் அதே போல் காதலனை பற்றி பேச சிறுமியை வெளியே அழைத்துள்ளார். சிறுமியும் ஆசிரியர் என்ற பெயரில் தைரியமாக அவருடன் தனியாக காரில் லாங் டிரைவிங் சென்றுள்ளார். அப்பொழுது ஒரு மறைமுகமாக யாரும் இல்லாத மைதானத்தில் வசதியாக காரை நிறுத்தியுள்ளார். பிறகு சிறுமியை கண்ணை மூடி என்னை உனது முன்னாள் காதலனாக நினைத்துக்கொள் என்று ஆசை வார்த்தைகள் கூறி அவரது தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்துள்ளார்.

அப்பொழுது சிறுமி இதில் எனக்கு உடன்பாடில்லை என்று தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பிறகு வீட்டிற்கு சென்ற சிறுமி தன்னிடம் ஆசிரியர் நடந்து கொண்ட விதத்தை பற்றி அழுது கொண்டே பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீஸ் ஆசிரியரை கைது செய்து பலமான விசாரணையை தொடங்கினர். ஆசிரியர் அவர் செய்த தவறை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டதால் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்கும் மற்றும் ஆபாச மெசேஜ் செய்த தவறுக்கும் சேர்த்து மொத்தமாக ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பலாத்கார விவகாரத்தில் தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் சரியான தண்டனை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் மக்கள் கருதி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :