சிறுமியை பலாத்காரம் செய்து கருவை பாலித்தீன் பையில் சுருட்டி வீசிய வாலிபர்கள்

சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பத்தை கலைத்து கருவை பாலித்தீன் பையில் சுருட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Apr 5, 2018, 19:44 PM IST

சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பத்தை கலைத்து கருவை பாலித்தீன் பையில் சுருட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சாத்னா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை நீரஜ் பாண்டே மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த சிறுமிக்கு வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்கா ஆட்டோவில் தனது தாயுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது அங்கு வழிமறித்த நீரஜ் பாண்டேவும் அவரது நண்பர்களும் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி வோறொரு மருத்துவரிடம் அழைத்து சென்று அவரது கர்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும், அந்த கருவை ஒரு பையில் கொண்டு சென்று கால்வாய் வீசியுள்ளனர்.

தவிர, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறி கூறினால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கருக்கலைப்பு செய்த மருத்துவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து சாத்னாவில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கருவுடன் குடும்பத்துடன் சென்று புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கூறியுள்ள சாத்னா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ், புகார் அளிக்கையில் தான் அங்கு இல்லை என்றும் குற்றவாளிகள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com

You'r reading சிறுமியை பலாத்காரம் செய்து கருவை பாலித்தீன் பையில் சுருட்டி வீசிய வாலிபர்கள் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை