மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி

by Logeswari, Mar 4, 2021, 20:47 PM IST

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீஸ் அதிரடியாக தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவபெருமாள் ஊராட்சியில் மணல் குவாரி ஒன்று கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.இந்த குவாரியின் மூலம் அதிமுக இளைஞர்,இளம்பெண்கள்,ஊராட்சி ஒன்றிய செயலாளராணா குணா போன்றவர்கள் ஒன்று சேர்ந்து மணலை திருடி திருச்சி,சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கடத்துவதாக போலீஸ்க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாதவப்பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணலை கடத்திய 7 பேரை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது.இந்த மணல் கடத்தலுக்கு முக்கிய தலைவனான மணல் குணாவை போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டி உள்ளிட்ட 8 வண்டிகள், 6 செல்போன்கள், மற்றும் 3 டூவீலர்ககளை போலீஸ் கைப்பற்றியது

You'r reading மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை