அவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் – சுந்தரா டிராவல் பட நடிகை ராதா குமுறல்!

தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தவர் ராதா. சென்னையில் உள்ள சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 39. இவருக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை ராதா தனியாக வாழ்ந்து வந்தார். இதையடுத்து அவருக்கு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியது. இதனையடுத்து எஸ்.ஐ வசந்தராஜாவும், நடிகை ராதாவும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே கருத்துவேறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் நடிகை ராதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த எஸ்.ஐ ராஜா அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் ராதாவின் தாயார் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். வசந்தராஜா ராதாவின் தாயயை அடிக்க முயற்சி செய்ததாகவும் அதனால் வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இது தொடர்பாக நடந்த விசாரணையில், உதவி ஆய்வாளர் வசந்தராஜாவும், நடிகை ராதாவும் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ராதா பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கண்டித்ததாகவும் ஆனால் அதற்கு ராதா முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஏற்கனவே தொடர்பில் இருந்த தொழிலதிபர் பைசல் மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பல ஆண் நண்பர்களிடன் தற்போது வரை தொடர்பில் இருப்பதாகவும் அந்த தொடர்புகளை துண்டிக்க சொன்னபோது ராதா மறுத்து விட்டதாலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds