14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..

by Ari, Apr 29, 2021, 07:39 AM IST

முகநூல் மூலம் அறிமுகமான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த நபரை, போலீசார் போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம், தஞ்சாவூரை சேர்ந்த 32 வயதான கமலக்கண்ணன் என்பவர், மூகநூல் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். முகநூல் மூலம் தொடர்ந்து பேசி வந்த கமலக்கண்ணன், சிறுமியிடம், அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சிறுமியும், கமலக்கண்ணனிடம் நெருங்கி பேச ஆரம்பித்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய குரூர எண்ணம் கொண்ட நயவஞ்சகன், சிறுமியிடம் அரைகுறை ஆடைகளுடன, வீடியோ எடுத்து தனக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். காதல் கண்ணை மறைத்ததால், சிறுமியும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் நள்ளிரவில் கண்விழித்து எழுந்த தாய் பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆடையின்றி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பதறிப்போய் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்த போது கமலகண்ணனுக்கு வீடியோக்களை அனுப்பியதும், அதை வைத்து அவர் சிறுமியை தன்னை காதலிக்கும்படி மிரட்டியதும் தெரியவந்துள்ளது. மேலும், தன்னை காதலிக்காவிட்டால், சிறுமியின் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என அந்த நபர் மிரட்டியதும் தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் கமலகண்ணனை குறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, முகநூல் கணக்கு மற்றும் அதிலிருந்த செல்போன் எண்ணை வைத்து, திருபூரில் இருந்த கமலக்கண்ணனை, புதுச்சேரிக்கு அழைத்துவந்து, விசாரணை நடத்தியதில், திருப்பூரில் ஒரு சாயபட்டரை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் அவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதும், சிறுமியை அவர் மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

You'r reading 14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை