சென்னை சேத்துப்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
சென்னை சேத்துப்பட்டில் புதிதாக கட்டி வந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கி கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading சென்னை சேத்துப்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி Originally posted on The Subeditor Tamil
More Crime News