பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...

by Ari, May 1, 2021, 12:52 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வடாஜ் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அங்குள்ள அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் தன்னுடைய தாய் மாமன் வீட்டிற்கு சென்று சிறுமி விளையாடுவது வழக்கம். இதனை அந்த அடுக்குமாடி வீட்டின் பத்தாவது மாடியில் வசிக்கும் 20 வயதான இளைஞர் பார்த்துள்ளார்.

இந்நிலையில், அடுக்குமாடி வீட்டின் 11 வது மாடியில் வசிக்கும் ஒருவருக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த 12 வயது சிறுமி சென்றுள்ளார். அதை பார்த்த அந்த பக்கத்து வீட்டு இளைஞரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளார். அப்போது அனைவரும் கொண்டாட்டத்தில் இருந்தபோது, அந்த இளைஞர், அந்த சிறுமியை நைசாக பேசி அறைக்கு வெளியே வரவைத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் வாயை அடைத்து மொட்டைமாடிக்கு இழுத்து சென்றுள்ளார் அந்த இளைஞர்.

பிறகு மொட்டை மாடியில் வைத்து அந்த சிறுமியை, அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் அந்த சிறுமி பயந்து போய் அங்கிருந்து வீட்டிற்கு ஓடி சென்றுள்ளார்.

பின்னர் இந்த விஷயதை தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய் உடனே அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You'r reading பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்... Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை