மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பித் ததும்புகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

mettur Dam

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது.

ஜூலை 23-ஆம் தேதி முதல் முறையாகவும், ஆகஸ்ட் 11 இரண்டாவது முறையாகவும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 85 ஆண்டுகளில் முழு கொள்ளளவை எட்டியதில் இது 41-ஆவது முறையாகும்.

READ MORE ABOUT :