குளிர்பானத்தில் மயக்கமருந்து பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி

கணவன் மனைவியின் பாலியல் கொடுமைக்கு சிறுமி ஒருவர் ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த தம்பதியினர் கோபி மற்றும் விஜயலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் வீட்டின் அருகில் சிறுமி (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒருவர் வசித்து வந்துள்ளார். அச்சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமியை ஆசை தீர்த்துக் கொள்ள நினைத்த கோபி அவரின் மனைவியின் உதவியுடன் அவரை கடந்த அக்டோபர் மாதம் முதல் அவரின் வீட்டிற்கு வரவழைத்தார். முதலில் நன்றாகப் பழகி அச்சிறுமியைப் பொய்யான அவர்களின் பாசத்திற்குக் கொண்டு வந்தனர்.

அவர்களின் பாசம் உண்மையென நம்பிய சிறுமி அவர்களுடன் வீட்டில் ஒருவரானார். இதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கோபி, அவரின் மனையின் உதவியுடன் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்தார் .இதனை அறியாத சிறுமி அதனை அருந்தினார். இதன் பின்பு மயக்கமடைந்த சிறுமியை, விஜயலட்சுமியின் கணவர் கோபி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைச் சிறுமி, சமீபத்தில் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள், இந்த தகவலை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், கோபி மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரையும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அத்தம்பதியினரை அழைத்து வந்து சப்-இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் சிறுமியை அழைத்து வந்து பலமுறை மயக்க மருந்தைக் குளிர்பானத்தில் கொடுத்து, பலருக்குச் சிறுமியை பாலியல் கொடுமைக்குத் தள்ளியுள்ளனர் எனத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பலரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்த நிலையில், கோபி அவரது மனைவி விஜயலட்சுமி இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds