கல்லூரி நிர்வாகி தாக்குதல் - தஞ்சையில் சரணடைந்த மருத்துவர்

Sep 26, 2018, 20:07 PM IST

தஞ்சையில் அபி அன்ட் அபி குழும தலைவர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சரணடைந்த எம்.வி.கே மருத்துவமனை தலைவர் பாரதிமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 18 ஆம் தேதி, இளங்கோவன் மீது மர்ம நபர்கள் சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் காயமடைந்த இளங்கோவன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இளங்கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, எம்விகே மருத்துவமனை மருத்துவர் பாரதிமோகன் அவரது, மனைவி அனுஷ்யா, அவரது மகள் ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீயின் தோழி கலைச்செல்வி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாரதிமோகனைத் தேடிவந்த போலீசார், இன்று அதிகாலை அவரது மனைவி, மகள் மற்றும் மகளது தோழி ஆகியோரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து, பாரதிமோகன் போலீசார் முன் சரணடைந்துள்ளார். இதையடுத்து, பாரதிமோகனின் மனைவி, மகள் உள்ளிட்டோரை விடுவித்த போலீசார் பாரதிமோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading கல்லூரி நிர்வாகி தாக்குதல் - தஞ்சையில் சரணடைந்த மருத்துவர் Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை