மனைவியுடன் குழந்தையும் சேர்த்து கொலை முயற்சி! திருவாரூரில்


திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி குழந்தையுடன் சேர்த்து கொலை செய்ய முயற்சித்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் வாசன் தெருவை சேர்ந்த கிஷோர் ராஜாவுக்கு ஜெயநந்தினி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மனைவி ஜெயநந்தினியை கொடுமைப்படுத்தி வரதட்சணை கேட்பதை கிஷோர் வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இதனால் தம்பதிகளுக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல மனைவியிடம் கிஷோர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஆனால் ஜெயநந்தினியிடம் அவ்வளவு பணம் இல்லாததால் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார் மேலும் அவரது குடும்பத்தினர் ஜெயநந்தினியை குழந்தையுடன் வைத்து மண்ணெணெய் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்.

இதில் குழந்தையுடன் தப்பிப்பிழைத்த ஜெயநந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த திருவாரூர் போலீசார் ஜெயநந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். மேலும் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் கணவர் கிஷோர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டது தெரியவந்து. தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds