மோடிக்கு எதிராக கறுப்பு பலூன்கள்- கட்சிகளை தடை செய்யக் கோரி வழக்கு!

PIL urges to ban Political outfits

by Mathivanan, Feb 21, 2019, 15:04 PM IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புப் பலூன்களை பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை முகமது என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மோடிக்கு எதிராக சில கட்சிகள் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டன.

அதே போல ஆளுநருக்கு எதிராகவும் கறுப்பு கொடி காட்டுதல், பலூன்களை பறக்கவிடுதல் சம்பவங்கள் நடைபெற்றன. இது தேசத்தை துண்டாடும் செயல்.

இந்த கட்சிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குறிப்பிடப்பட்ட அனைத்து கட்சிகளையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

You'r reading மோடிக்கு எதிராக கறுப்பு பலூன்கள்- கட்சிகளை தடை செய்யக் கோரி வழக்கு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை