ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை - வழக்கு தள்ளுபடி

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனால் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் வழக்கை காரணம் காட்டி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கு தொடர்ந்திருந்த திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2016 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சுந்தர்ராஜனுக்கு எதிராக அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஒட்டப்பிடாரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தாம் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கிருஷ்ணசாமி வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து வழக்கு தள்ளுபடியானது. இதனால் ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தடையேதும் இல்லை என்றும், வழக்கு தள்ளுபடியான தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் தேர்தல் நடத்த தடையாக காரணம் கூறப்பட்ட வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வாபஸ் பெறப்பட்டதால் இந்தத் தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds

READ MORE ABOUT :