மகாராஷ்டிர முதல்வர் கவர்னருடன் சந்திப்பு.. சிவசேனா தனியாக சந்திப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர்.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும் ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டில் 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா ஒப்புக் கொண்டது.

பின்னர், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 16 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது. இதில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியமைப்பது பற்றியும், சிவசேனா விவகாரம் குறித்தும் பேசியிருக்கிறார்.

முன்னதாக, சிவசேனா மூத்த தலைவர் திவாகர் ரவ்தேயும், கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அவரும் பாஜகவுடன் ஆட்சிப் பங்கீடு குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது.

இந்த இருவரிடமும் பேசியது பற்றிய விவரங்களை கவர்னர் கோஷ்யாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிப்பார் என்றும் அதனடிப்படையில் அமித்ஷா, மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 30ம் தேதி மும்பையில் நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருக்கிறார். அனேகமாக, அன்று மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds