ஓ.பி.எஸ் மீது விசாரணை நடத்தப்படவில்லையா?- உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான ஊழல் புகார் மீது மூன்று மாதங்களாக விசாரணை நடத்தப்படாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, மூன்று மாதங்களுக்கு முன்னர் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஊழல் புகார் கொடுத்தார். அதில், ‘தன் பதவியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சம்பாரித்து, அதை பல நிறுவனங்களில் ஓ.பி.எஸ் முதலீடு செய்துள்ளார்.

இவை அனைத்தையும் அவர் பினாமி மூலம் நிர்வகித்து வருகிறார். மேலும், தனது வருமான வரி கணக்குகள் குறித்து தவறான தகவல்களை தேர்தல் ஆணையம் முன்பு அவர் சமர்பித்துள்ளார்’ என்று பல ஆவணங்களை சமர்பித்தார். மூன்று மாதங்கள் ஆன பின்னரும் புகாருக்கு எந்த வித நடவடிக்கையும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககம் எடுக்கவில்லை.

இதனால், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிட்டார் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‘புகார் கொடுத்து 3 மாதங்களுக்குப் பின்னரும் ஏன் ஓ.பன்னீர்செல்வம் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது’ என்று ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் கேள்வியெழுப்பி வழக்கை வரும் திங்கள் கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds