விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க போராடுவேன் - வைகோ

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவரை சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko

இந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்தது.

இதை எதிர்த்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, 2013 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், மற்றும் சுப்ரமணியன் அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது. விசாரணைக்கு வைகோ நேரில் ஆஜரானார்.

மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "விடுதலை புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையால் வைகோ பாதிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை உரிமை இல்லை. சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் வைகோவின் இணைப்பு மனு நிராகரிக்கப்படுள்ளது."

"டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னையில் வழக்கு தொடர முடியாது... வைகோவுக்கு அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதித்த தடையை நீக்கும் வரை சட்டரீதியாக போராடுவேன்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds