சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை ஐந்தரை மணி அளவில் திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், கோவிலின் மேல் சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். வரும் 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் கோவில் நடை சாத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
You'r reading சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு Originally posted on The Subeditor Tamil
More Spirituality News
READ MORE ABOUT :