ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசித்தனர்.

மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் தொடக்கம் முதல் மிக பிரசிதியாக நடைபெறும். குறிப்பாக, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவை மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா.

இந்த விழாவை காண தமிழகம் மட்டுமல்லால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் கூட சித்திரை திருவிழாவை காண வருவர். கடந்த 18ம் தேதி தொடங்கிய இத்திருவிழா இன்றுடன் 12 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கள்ளழகர் நேற்று இரவு முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த கள்ளழகர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கி புறப்பட்டார். தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு பச்சை பட்டு உடுத்தி அதுகாலை 3 மணிக்கு கள்ளழகர் புறப்பட்டார்.

தங்க குதிரை வாகனத்தை சுமந்து வந்த சீர்பாத தூக்கிகள் உள்ளங்கைகளில் தாங்கி தூக்கிப்பிடித்தபடி இருபுறமும் அசைத்தனர். இதனை பார்ப்பவர்களுக்கு அழகர் குதிரையில் துள்ளி வருவது போன்ற பரவசமான நிலை ஏற்பட்டது.

சரியாக காலை 5.55 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர், வீரராகவ பெருமாளை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் 3 முறை சுற்றி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்ப்டட பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை நகர் பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்னர். பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds