மதுரை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Election 2019, EC extends polling time in Madurai

by Nagaraj, Mar 18, 2019, 14:53 PM IST

சித்திரைத் திருவிழா நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வாக்குப்பதிவு நேரத்தை மட்டும் 2 மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 18-ந் தேதி மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் மதுரையில் சித்திரைத் திருவிழா களை கட்டியிருக்கும் என்பதால் பொதுமக்களிடம் இருந்தே இந்த தேதி அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தேதியை மாற்றவேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் விடாப்பிடியாக மறுத்ததால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் பதிவானது.

இந்நிலையில் சித்திரைத் திருவிழா வால் வாக்குப் பதிவு பாதிக்கப்படாமல் இருக்க மதுரை தொகுதியில் வழக்கமாக வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தை மாலை 6 மணிக்குப் பதிலாக இரவு 8 மணி வரை நீட்டித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

You'r reading மதுரை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை