தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமிகளுடன் செல்பி எடுத்து மு.க.ஸ்டாலின் உற்சாகம்

Loksabha election, MkStalin takes selfi with childrens in election campaign

by Nagaraj, Mar 20, 2019, 10:39 AM IST

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழி நெடுகிலும் சிறுவர் சிறுமிகளுடன் செல்பி எடுத்தும், ஆட்டோகிராபில் கையெழுத்திட்டும் உற்சாகப்படுத்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கி விட்டார். திருவாரூரில் சன்னதி தெருவில் இருந்து நடந்து சென்றபடியே, திருவாரூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கும், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.

வீடாகச் சென்ற மு. க .ஸ்டாலினுக்கு பொது மக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர். அப்போது சிறுவர், சிறுமிகள் மு.க.ஸ்டாலினிடம் வந்து அவரிடம் செல்பி எடுக்க ஆசைப்பட்டனர். அவர்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தும், ஆட்டோ கிராப்பில் கையெழுத்திட்டும் மு.க.ஸ்டாலின் உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

You'r reading தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமிகளுடன் செல்பி எடுத்து மு.க.ஸ்டாலின் உற்சாகம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை