பிரான்சில் மீண்டும் கொடூரம் 3 பேர் குத்திக் கொலை.. பெண் கழுத்து அறுத்து கொலை.

பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று ஒரு பெண் உள்பட 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இதில் பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் முகமது நபியின் கார்ட்டூனை பயன்படுத்தியதாக கூறி ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை போலீசார் பின்னர் சுட்டுக்கொன்றனர். இது தீவிரவாத தாக்குதல் என்றும், முஸ்லிம் மதம் மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறினார்.

பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி, குவைத் உள்பட முஸ்லீம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மக்ரோனின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று துருக்கி அதிபர் ரெஜப் தையிப் கூறினார். மக்ரோன் முஸ்லிம் மதத்தை கேவலப்படுத்துகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார். சிரியா, லிபியா உள்பட பல முஸ்லிம் நாடுகளில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தன. பல முஸ்லீம் நாடுகளில் பிரான்ஸ் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ஆசிரியர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பிரான்சில் முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று தெற்கு பிரான்சில் உள்ள நீஸ் என்ற நகரத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இது தவிர மேலும் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கொலையாளியை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது சர்ச்சில் பிரார்த்தனைக்காக ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று நீஸ் நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds