Apr 16, 2019, 13:04 PM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். Read More
Apr 16, 2019, 12:51 PM IST
அதிருப்தியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் பலம். ஸ்டாலின் திமுக தலைவரானதும் முதலில் அனைவரையும் அரவணைத்தே சென்றார். திமுகவில் இருந்து விலகிச் சென்ற பலரையும் அழைத்து பேசினார். அதிருப்தியாளர்களை அழைத்து உற்சாகப்படுத்தினார். அப்படித்தான் கட்சியை விட்டு விலகியிருந்த முல்லைவேந்தனை அழைத்து மீண்டும் கட்சியில் இணைத்து உற்சாகப்படுத்தினார் Read More
Apr 16, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் Read More
Apr 16, 2019, 00:00 AM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 16, 2019, 10:00 AM IST
அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Read More
Apr 16, 2019, 10:04 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து மலையில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை பெட்டிப்படுக்கைகளுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். Read More
சென்னையில் தேர்தல் களேபரத்தில் போலீசார் மும்முரமாக இருக்க, பகல் கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்துள்ளனர். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களே, மிகவும் உஷாராக இருங்கள்! Read More
Apr 16, 2019, 09:51 AM IST
தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 மக்களவைத் தொகுதி தேர்தலும், 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதி அரவக்குறிச்சி உள்பட 4 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் பிரச்சாரம் முடியும் தருவாயில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது Read More
Apr 16, 2019, 09:39 AM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற உச்சகட்ட குழப்பத்தில் அத்தொகுதி அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் உள்ளனர். Read More
Apr 16, 2019, 09:25 AM IST
வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More