Mar 18, 2019, 10:48 AM IST
ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பியை களத்தில் இறக்கி பலப்பரீட்சை நடத்தவிட்டுள்ளன. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் சகோதர யுத்தத்தில் படு சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. Read More
Mar 17, 2019, 09:26 AM IST
மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவதால் வேட்பாளர்கள் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Mar 17, 2019, 09:09 AM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 22:00 PM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 15:05 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான்.மேலும் தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ? என உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 15, 2019, 09:40 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 12:13 PM IST
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொது மக்களை பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச்செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. Read More
Mar 13, 2019, 14:24 PM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெறுவதை மாற்றி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 12, 2019, 11:22 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. Read More
Mar 11, 2019, 22:27 PM IST
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏதுவாக வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More