மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர், ஊடகவியலாளர்களிடம் அனுபவம் நன்றாக இருந்தது என்று கூறினார்
மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 1.22 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது.
கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இயக்கத்தைச் சேர்ந்த தலா 3 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திடீரென தன்னுடைய டி சர்ட்டை கழட்டி அவர் கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.