ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ரத்தாகிறதா? - தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More


வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். Read More


வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். Read More


வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா?- ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை

வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற உச்சகட்ட குழப்பத்தில் அத்தொகுதி அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் உள்ளனர். Read More