ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்

Stand up india scheme

பொருளாதார ஏற்ற தாழ்வுகளைக் களைய மத்திய/ மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் , நலத் திட்டங்களையும் மக்களிடையே அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. நலிவுற்ற சமுதாயமாகப் பார்க்கப்படும் பட்டியலின , பழங்குடியினர் மற்றும் பெண்கள் போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையை தன்நம்பிக்கையுடன் முன்னேற்றமடைய மத்திய அரசால் 2016 ஏப்ரல் 5 ல் தொடங்கப்பட்ட திட்டம் தான் Stand Up India என்பதாகும்.

திட்டத்தின் நோக்கம்

இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின , பழங்குடியினர் மற்றும் பெண்கள் போன்றோரை ஒரு தொழில்முனைவோராக அல்லது வணிகம் சார்ந்த சந்தையில் அவர்களின் தடம் பதிக்க உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.இதன் மூலம் வங்கியிடமிருந்து 10 இலட்சம் முதல் 1 கோடி வரை வங்கியின் ஒரு கிளையில் ஒரு பட்டியலினத்தவரோ அல்லது பழங்குடியினரோ அல்லது பெண்களோ பெற்றுக் கொள்ள இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த கடனுதவி மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதகமில்லா உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனம் அல்லது வர்த்தகம் சார்ந்த நிறுவனம் போன்றவற்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.குறைந்த பட்சம் 2.5 இலட்சம் பயனாளிகளை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் வணிக வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

31.03.2019 தேதி நிலவரப்படி இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 72,983 வங்கிக் கணக்குகள் மூலம் ரூபாய் 16,085 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் பயனாளிகள் - 59,429
பட்டியலினத்தவர் - 10,451
பழங்குடியினர் -3,103

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறத் தேவையான படிவத்தை www.standupmitra.in என்ற தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

You'r reading ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விரைவில் முதல் குழந்தை... மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த ஜோடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்