அபிசரவணன், அதிதி மேனன் பிரச்னைக்கு தீர்வே இல்லையா

Abi Saravanan and Adhiti Menon case adjourned

நடிகை அதிதிமேனனுடன் சேர்த்து வைத்திட கோரி நடிகர் அபிசரவணன் தொடர்ந்த வழக்கில் இருவரும் இன்று மதுரை மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.

நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி மேனன் ஆகியோர் பட்டதாரி படத்தில் நடித்தவர்கள். போலியாக திருமண பதிவு சான்று தயாரித்து தன்னை அபி சரவணன் மிரட்டுவதாக அதிதி மேனன் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அபி சரவணன் அதிதியுடன் திருமணம் நடைபெற்ற வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இருவரும் திருமணம் செய்து கொண்ட பதிவு ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அபி சரவணன் பெற்று கொண்டார். அதனை வைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தார். தன் மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆஜராகிய இருவரிடமும், நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அபி சரவணனை நான் திருமணம் செய்யவில்லை என அதிதி மேனன் விசாரணையின் போது மீண்டும் மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். உரிய சமரச தீர்வு எட்டப்படாததால் விசாரணையை வரும் மே 2ம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

You'r reading அபிசரவணன், அதிதி மேனன் பிரச்னைக்கு தீர்வே இல்லையா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிறிஸ்பி முட்டை போண்டா ஸ்னாக் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்