நடிகைகளே உஷார் - குஷ்பு சொன்ன அவசர எச்சரிக்கை!

Actress khushbu warns female artists fake casting calls cirulates in social media

சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை என சமூக வலைதளங்களில் சுற்றி வரும் விளம்பரத்துக்கும் நந்தினி சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் குஷ்பு கணவர் மற்றும் இயக்குநர் சுந்தர்.சியின் தயாரிப்பு நிறுவனமான ஆவ்னி சினிமேக்ஸ் சார்பில் சன் டிவியில் வெளியான நந்தினி தொடர் மாபெரும் வெற்றியை பெற்றது. அதை மையமாக வைத்து போலியான விளம்பரங்களை பரப்பி சிலர் ஆதாயம் தேடுவதாக குஷ்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை, சன் டிவியில் வெளியான நந்தினி சீரியல் குழு இயக்கும் அடுத்த சீரியலுக்கு 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்கும் அழகான பெண் நடிகை தேவை. இதற்கான ஆடிஷன் நாளை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் சுற்றி வருவதாகவும், அதற்கும் சுந்தர்.சியின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்தவொரு தொடர்பு இல்லை என்றும், நந்தினி சீரியலின் பெயரைக் கொண்டு போலியான விளம்பரம் செய்யும் அந்த நபரின் பெயர் தங்கராஜ் என்றும், போலியான இந்த விளம்பரத்தைக் கண்டு பெண்கள் ஏமாறவேண்டாம் என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரிய பேனர் என்ற பெயரை பார்க்கும் பெண்கள், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையில்லாத சிக்கல்களில் சிக்கி வருகின்றனர். இதற்கு சினிமா துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது.

அதிமுக அரசு மீது அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்;மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

You'r reading நடிகைகளே உஷார் - குஷ்பு சொன்ன அவசர எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘‘பா.ஜ.க.வில் ஓ.பி.எஸ். சேருவது 100% உண்மை’’ தங்கத்தமிழ்ச் செல்வன் பேட்டி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்