என்னது இது ஜெயம் ரவியின் கதையா?

Oh My Kadavule First look release

இறுதிச்சுற்று படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங்கின் புதிய படமான ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார்.

திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக வெளியிட்டார்.

மேலும், அந்த ஃபர்ஸ்ட் லுக்குடன், என்னது இது என் கதை மாதிரியே இருக்கு! என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என்பதை அவர் அதில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங்கிற்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பும் வெற்றியும் போக போக கிடைக்கவில்லை. இருவருக்குமான ஒரு வரவேற்பு இந்த படத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You'r reading என்னது இது ஜெயம் ரவியின் கதையா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தலையை வெட்டி விடுவேன்.. ஹரியானா முதல்வர் கோபம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்