பொன்னியின் செல்வனில் இருந்து சத்யராஜ் விலகல்.. மணிரத்னம் கண்டிஷன் ஒத்துவராதால் முடிவு..

sathyaraj optout from ponniyinselvan

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் பிரமாண்டமாக இயக்க உள்ளார். பாகுபலியில் கட்டப்பா வேடம் ஏற்று அசத்தியிருந்த சத்யராஜ் இப்படத்தில் , பழுவேட்டரையர் என்ற முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருந்தார். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டார்.

6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும்...இடையில் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால், சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம், சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

You'r reading பொன்னியின் செல்வனில் இருந்து சத்யராஜ் விலகல்.. மணிரத்னம் கண்டிஷன் ஒத்துவராதால் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கபடி பயிற்சியாளராக நடிக்கிறார் தமன்னா.. கபடி ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்கிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்