பிகில், கைதி 24 மணி நேர காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?.. 2 படம் ரிலீஸ் ஆவதால் போட்டி வலுக்கிறது..

Bigil and Kaithi to release on October 25

ரஜினி, விஜய், அஜீத் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடுவது வழக்கம். அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவதுண்டு.

முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் அதற்கான டிக்கெட் விலையும் அதிகமாக விற்கப்படுகிறது. இதன் மூலம் படத்தைபற்றிய மவுத்டாக் எனப்படும் வாய்மொழி பேச்சு விடிவதற்கு முன்னே நெட்டில் பரவ தொடங்கிவிடுகிறது. அதிகாலை காட்சிகள் திரையிடுவதற்கு சில தரப்பு ஆட்சேபனை தெரிவித்திருந்தது. எனவே இம்முறை இன்னமும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

இந்நிலையில் தீபாவளியையொட்டி 2 நாள் முன்னதாக 25ம் தேதி பிகில், கைதி படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இப்படங்களை 24 மணி நேரமும் தியேட்டர்களில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அனுமதி கேட்டு தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது. இதுபற்றி தியேட்டர் அதிபர் தரப்பில் கூறும்போது,' இருதினங்களுக்கு முன்பாக 24 மணி நேர தொடர் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்' என்றனர்.

You'r reading பிகில், கைதி 24 மணி நேர காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?.. 2 படம் ரிலீஸ் ஆவதால் போட்டி வலுக்கிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகாத்மா காந்தியின் கொள்கைகளை பரப்புங்கள்.. திரையுலகினரிடம் மோடி வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்