விஜய் சேதுபதி படத்தில் இணையும் இரண்டு பிரபல இயக்குனர்கள்.. அமலாபால் கதாநாயகியாகிறார்..

Magizh Thirumeni to make acting debut in Vijay Sethupathi

விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்துக்கு பிறகு, யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

புது இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக மகிழ் திருமேனி நடக்கிறார். இவர் ஏற்கனவே தடையற தாக்க, மீகா மன் போன்ற படங்களை இயக்கியவர். அதேபோல் வேலாயுதம், தனி ஒருவன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன்ராஜாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு, என்ன சதத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சர்வதேச அளவிலான பிரச்னை ஒன்றை மையமாக வைத்து உருவாகும் யாதும் ஊரே..... படத்தில் இசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளார். இதுதவிர வெளிநாட்டு நடிகை ஒருவர் ஹீரோயி னாக நடிக்க உள்ளார்.

அதற்கான தேர்வு நடக்கிறது. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்தி துரை தயாரிக்கிறார்.

You'r reading விஜய் சேதுபதி படத்தில் இணையும் இரண்டு பிரபல இயக்குனர்கள்.. அமலாபால் கதாநாயகியாகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 100  பட குறிக்கோளுடன் இருக்கும் நடிகை சாதிப்பாரா, மூட்டை கட்டுவாரா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்