இரவு முழுவதும் அழுத நடிகை.. பட வாய்ப்பில்லாததால் விரக்தி..

புற்றீசலிலில் புறப்படுவதுபேர் படத்துக்கு படம் நடிகர், நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தனக்கான இடத்தை பிடிக்கின்றனர். மற்றவர்கள் வாய்ப்பில்லாமல் விலகுகிறார்கள்.

கன்னடத்தில் நடித்து வந்த நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா தெலுங்கில் நடிக்கச் சென்றார். ரவுடி என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்பு வரவில்லை. மீண்டும் கன்னடத்துக்கே சென்றவர் ஓரளவுக்கு படவாய்புகளுடன் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரக்‌ஷித் ஷெட்டி 'அவனே ஸ்ரீமன்நாராயணா' படத்தில் நடித்திருக்கிறார். இபபடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. தெலுங்கில் பட வாய்ப்பில்லாமல் கன்னட படத்துக்கே திரும்பி சென்ற ஷான்வியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு பழைய நினைவுகள் வந்துவிட மேடையிலேயே கதறி அழுதார்.

'எனக்கு அழகான தோற்றம் இல்லை, நடிக்க தெரியவில்லை என்றெல்லாம் விமர்சனம் வந்ததால் ரவுடி படத்துக்கு பிறகு தெலுங்கில் பட வாய்ப்பு வரவில்லை. எந்த வேலையும் இல்லாமல் ஒரு வருடம் சும்மா இருந்தேன். அதை நினைத்து நினைத்து ஒவ்வொரு நாள் இரவும் அழுவேன். நம்மிடம் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றியது. பிறகு கன்னடத்தில் பல படங்களில் நடித்தேன். தற்போது மீண்டும் இந்த ஐதராபாத்துக்கு வந்திருக்கிறேன். இந்த முறை நிச்சயம் ஜெயிப்பேன். ஏனென்றால் இப்படம் அவ்வளவும் அனைவரது கடுமையான உழைப்பாலும் நடிப்பாலும் படமாகியிருக்கிறது என்றார் நடிகை ஷான்வி.

You'r reading இரவு முழுவதும் அழுத நடிகை.. பட வாய்ப்பில்லாததால் விரக்தி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெர்மன் அழகி.. மேகா ஆகாஷும் கைகோர்க்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்