நயன்தாரா, நெற்றிக்கண் ட்ராப் ஆகிறதா? அதிர்ச்சியில் படக் குழு..

டைரக்டர் காதலன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தவர் நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலன் ராவ் இயக்குகிறார்.

அதன் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் திடீரென்று நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பில் நடிக்கச் சென்றுவிட்டார் நயன்தாரா.
நெற்றிக்கண் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி வைக்கப்படிருக்கிறது. அதற்கு காரணம் விக்னேஷ்சிவனிடம் ஏற்பட்டுள்ள பட்ஜெட் பிரச்னைதான் என்று கூறப்படு கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது ஆனால் அப்படம் ரத்தாகிவிட்டது. இந்நிலையில் நெற்றிக்கண் படம் டிராப் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை விக்னேஷ் சிவனுக்கு நெற்றிக்கண் படம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் நயன்தாராவே தயாரிப்பு பொறுப்பு ஏற்று அப்படத்தை தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

You'r reading நயன்தாரா, நெற்றிக்கண் ட்ராப் ஆகிறதா? அதிர்ச்சியில் படக் குழு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்ரீதேவி சமாதி அருகே தகனம் ஆக விரும்பும் இயக்குனர்.. சர்ச்சை டைரக்டரின் மற்றொரு சர்ச்சை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்