ரஜினி படம் இயக்கும் அதிர்ஷ்டத்தை நழுவ விட்ட நடிகர்.. மன்னிப்பு கேட்டு சூப்பர் ஸ்டாருக்கு கடிதம்..

ரஜினிகாந்த படத்தை இயக்கவதற்காக ஷங்கர் முதல் பல இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அவரே கதைகள் கேட்டு இயக்குனரை தேர்வு செய்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிருத்வி ராஜுக்கு ரஜினி படம் இயக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து அதிர்ஷ்டத்தை நழுவ விட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பிருத்விராஜே தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மோகன்லால் சார் நடித்த லுசிபெர் படத்தை மலையாளத்தில் நான் இயக்கினேன். அதன்பிறகு வரிசையாக படங்கள் இயக்க வாய்ப்பு வந்தது. ரஜினிகாந்த் படம் இயக்குவதற்கு என்னை அணுகினார்கள். ஆனால் அந்த சூழலில் அப்படத்தை என்னால் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன். அவ்வளவு பெரிய வாய்ப்பை ஏற்க முடியாதது எனக்கு வருத்தமாக இருந்தது.

அதற்கு காரணம் ஆடுஜீவிதம் என்ற எனது கனவு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அதற்காக 3 மாதம் எந்த படப்பிடிப்பு பணியிலும் ஈடுபடாமல் முழுசிந்தனையாக அக்கதையிலும் அதற்கான பயிற்சிகளும் ஈடுபட்டிருக்கிறேன்.

ரஜினிகாந்த் படத்தை இயக்க முடியாமல்போனது குறித்து எனது மன்னிப்பை தெரிவித்து ரஜினிக்கு நீண்டதொரு கடிதம் எழுதி அனுப்பினேன். அவ்வளவு பெரிய கடிதத்தை இதுவரை என் வாழ்நாளில் யாருக்கும் நான் எழுதியதில்லை' என்றார்.

மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் நினைத்தாலே இனிக்கும், காவியதலைவன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே என பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ரஜினி படம் இயக்கும் அதிர்ஷ்டத்தை நழுவ விட்ட நடிகர்.. மன்னிப்பு கேட்டு சூப்பர் ஸ்டாருக்கு கடிதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கவுதமி ஆதரவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்