திரிஷா படம் திடீர் தள்ளி வைப்பு.. சர்ச்சைக்குரிய படமா?

நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கும் படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்குகிறார். இன்று (28ம் தேதி) இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென்று ரிலீஸ் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்துப் படத் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில், 'பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரிலீஸை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிஷா நடித்திருக்கும் இப்படம் ஆணவக் கொலை தொடர்பான கதையாம். ஆணவக் கொலை பற்றிய கதையாக வெளியாகியிருக்கும் திரௌபதி படத்துக்கு முற்றிலும் எதிரான கருத்தை கொண்டதாக திரிஷாவின் படக் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டு படமும் ஒரே நேரத்தில் வெளியானால் பிரச்சினை எழக்கூடும் என்பதால் இப்படம் தள்ளிவைக்கப்பட்டதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

You'r reading திரிஷா படம் திடீர் தள்ளி வைப்பு.. சர்ச்சைக்குரிய படமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்ருதிக்கு முகம், மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி.. அவரே வெளியிட்ட தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்