ரஜினிக்கு வில்லன் யார்? ஜெயம் ரவி வில்லன் திடீர் விளக்கம்..

who is annaththa villain

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இப்படத்தை விசுவாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். கதாநாயகிகளாக மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரஜினி காந்த் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்பது வழக்கம். இப்படத்தைப் பொறுத்தவரை வில்லன் யார் என்பது பெரிதுபடுத்தப்படவில்லை.

ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் தெலுங்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்தான் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அண்ணாத்த படத்தில் வில்லனாக நான் நடிக்கவில்லை எனத் தெரிவித்தார். ' ஏற்கனவே இயக்குனர் சிவா தனது இரண்டு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஒரு படம் இயக்குவது பற்றி அடிக்கடி என்னைச் சந்தித்துப் பேசுவார்.

அண்ணாத்த படத்தில் என்னை நடிக்கக் கேட்கவில்லை 'என்றார். அண்ணாத்த படம் குடும்ப கதையாக உருவாக்கிறது. இதில் வில்லனுக்கு அதிக வேலை கிடையாது. ஆனாலும் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் அவரே வில்லன் வேலைகளைச் செய்ய வாய்ப்பிருக்கிறது.

You'r reading ரஜினிக்கு வில்லன் யார்? ஜெயம் ரவி வில்லன் திடீர் விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாட்ஷா வசன பாடலுக்கு ஆடிய ஐ ஏ எஸ் அதிகாரி.. தாஜ்நூர் உருவாக்கிய உள்ளே போ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்