காமெடி நடிகர் விவேக் தந்த அதிர்ச்சி.. கடைசியாகப் போட்ட மெசேஜ் என்ன தெரியுமா?

vivek off from all social media till May 3rd

காமெடி நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாக நடித்து தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார் விவேக். இவர் டிவிட்டரில் ரசிகர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் வைரஸ் தொற்று ஏற்படாமல் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுபற்றி பல்வேறு வீடியோக்களும், தான் வீட்டில் எப்படி பொழுதை கழிக்கிறேன் என்பது பற்றியும் அடிக்கடி டிவிட்டரில் தகவல் தெரிவித்து வந்தார். இது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அவர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் டிவிட்டரிலிருந்து வரும் மே 3ம் தேதி வரை விலகியிருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் விவேக். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார், இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.கடந்த 28ம் தேதி கடைசியாக விவேக் தனது டிவிட்டரில், ”வடியாத வெள்ளம் இல்லை;விடியாத இரவு இல்லை;முடியாத துன்பமும் இல்லை!நம்பிக்கையோடு இருப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.வரும் மே 3ம் தேதிவரை கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading காமெடி நடிகர் விவேக் தந்த அதிர்ச்சி.. கடைசியாகப் போட்ட மெசேஜ் என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகாராஷ்டிராவில் கொரோனா சாவு 400 ஆக உயர்ந்தது.. நாடு முழுவதும் 1074 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்